ஞாயிறு, ஜூன் 17, 2012

நவரத்தினங்கள் (பாகம்-2)



நவரத்தினங்களில் நான்கை முதல் பகுதியில் பார்த்தோம். மீதமுள்ள ஐந்து கற்களை இப்போது பார்ப்போம்...

5.                  வைரம்

ஆங்கிலத்தில் டையமண்ட் என்றழைக்கப்படும் வைரம் ஹிந்தியில் ஹீரா என்று அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் இதன் பெயர் வஜ்ரம். இதிலுள்ள ரசாயனப் பொருள் கார்பன். நவரத்தினங்களிலேயே அதிகக் கடினத் தன்மைக் கொண்டது வைரம் தான். வைரத்தின் தெளிவு, நிறம், எடை ஆகியவற்றை வைத்து இதன் தரம் மற்றும் விலை நிர்ணயிக்கப் படுகிறது. இந்தியா, ஆஃப்ரிகா ஆகிய நாடுகளில் தான் இது அதிக கிடைக்கிறது என்றாலும் பெல்ஜியம் தான் வைரம் பட்டைத் தீட்டுவதில் பெயர் பெற்ற நாடாக இருக்கிறது.

5.        மரகதம்

மரகதத்தின் ஆங்கிலப் பெயர் எமரால்ட்; ஹிந்தி பெயர் பன்னா (पन्ना). இதன் புராதனப் பெயர் ஹரின்மணி. பெரில் வகையைச் சேர்ந்த இதன் ரசாயனப் பொருள் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட். எளிதில் நொறுங்கும் தன்மைக் கொண்டது மரகதம். மதுரை மீனாட்சி அம்மன் திருஉருவச் சிலை மரகதத்தால் ஆனது என்று கூறுவர். அதிர்வுகளால் இது தெரித்துவிடும் என்பதாலேயே கர்பகிரகத்தின் அருகில் மேள தாளங்கள் தவிர்க்கப் படுகிறது. இதிலிருந்து  குரோமியத்தை நீக்கி விட்டால் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படும். இந்த பச்சை நிற பெரிலை சூடாக்கினால் அக்வாமெரின் என்னும் நீலப்பச்சைக் கல்லாக மாறும்.

புளூரைட், மாலக்கைட், ஜேட், செர்ப்பெண்டின்கல் ஆகியவை மரகதத்தின் போலிகள்

7.        வைடூர்யம்

இந்தியிலும் வைடூர்யம் என்ற பெயரையே கொண்ட இதன் ஆங்கிலப் பெயர் ‘கேட்ஸ்-ஐ’. க்ரிஸோபெரில் என்ற வகையைச் சேர்ந்த இதில் உள்ள ரசாயனப் பொருள் பெரில்லியம் அலுமினேட். கேடோயன்ஸி (chatoyancy) என்ற பூனைக்கண்ணைப் போல ஒரு நூலிழையான ஒளி ஊடுறுவிச் செல்வதால் ஆங்கிலத்தில் இது கேட்ஸ்-ஐ என்றுக் கூறப்படுகிறது.

வைடூர்யம் போலவே க்வார்ட்ஸ் வகை வைடூர்யங்களும் கிடைக்கின்றன. இவை ப்ரவுன் கலந்த பச்சையாக இருக்கும். பழுப்பு நிற நூலிழை இருந்தால் டைகர்-ஐ என்றும் கருப்பு நிற நூலிழை இருந்தால் ‘புல்ஸ்-ஐ’ என்றும் அழைக்கப்படும். ஆனால், இவை வைடூர்யம் என்றுக் கொள்ளப்படுவதில்லை.

8.        நீலம்

புராதன காலத்தில் நீலகந்தி (அ) இந்திரநீலம் என்றழைக்கப்பட்டு தற்போது தமிழிலும் இந்தியிலும் நீலம் என்றழைக்கப்படும்  இதன் ஆங்கிலப் பெயர் ப்ளூ ஸஃபையர். யெல்லோ ஸஃபையர் என்றழைக்கப்படும் புஷ்பராகம் போலவே இதுவும் கொரண்டம் வகையைச் சேர்ந்த அலுமினியம்-ட்ரை-ஆக்ஸைட் என்ற ரசாயனப் பொருளையேக் கொண்டது. இதில் டைட்டானியம் என்ற வேதிப் பொருளும் இணைவதால் நீல நிறம் பெருகிறது. காஷ்மீர் நீலம் தான் மிகவும் புகழ்பெற்றது.

நீல டான்சானைட் கல் (கத்திரிபூ நிறம் சேர்ந்தது), நீல டர்மலின் (ராமர் பச்சை நிறம் கொண்டது) ஆகியவை இதன் போலிகள். இந்த போலிகளை டைக்ராஸ்கோப் (dichroscope) என்ற கருவியின் மூலம் கண்டறிகிறாகள்.

9.        பவழம்

முத்தைப் போலவே பவழமும் ஒரு ஆர்கானிக் ஜெம்ஸ்; அதாவது உயிரியிலிருந்து கிடைக்கும் கல்.  இதுவும் கடல் வாழ் உயிரியிலிருந்தே பெறப்படுகிறது. பவழப் பூச்சி  என்ற சிறிய உயிரியின் எச்சங்களே பவழப் பாறைகளாக மாறுகின்றன. கால்சியம் கார்பனேட்டால் ஆன இதன் ஆங்கிலப் பெயர் கோரல்; ஹிந்தி பெயர் மூங்கா (मूङ्गा).  பொதுவாக சிவப்பு நிறத்திலேயே இருந்தாலும், வெள்ளை, கருப்பு, நீல வண்ணங்களிலும் கிடைப்பது உண்டு. முத்தைப் போலவே இதன் கடினத் தன்மையும் மிகவும் குறைந்ததாகும்.

கார்னீலியன், சிகப்பு ஜாஸ்பர் கற்கள் ஆகியவை பவழத்தின் போலிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக